search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய இரட்டைச் சிறுவர்கள் பலி

    ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய உயிரிழந்த இரட்டைச் சிறுவர்களின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டது.
    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர், டவர் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன்கள் ஜஸ்டின் (13), ஜெபஸ்டின் (13) இரட்டையர்களான இருவரும் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று காலை ஜஸ்டினும், ஜெபஸ்டினும் நண்பர்களுடன் விளையாடி விட்டு மிட்டனமல்லி கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றனர்.

    அப்போது தண்ணீரின் வேகத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை முத்தாபுதுப்பேட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஜஸ்டினும், ஜெபஸ்டினும் பிணமாக மிதந்தனர். அவர்களது உடலை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி இரட்டை சகோதரர்கள் பலியான சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×