என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு: பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு
Byமாலை மலர்24 March 2020 1:45 PM GMT (Updated: 24 March 2020 1:45 PM GMT)
முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு கண்ணகி தெருவை சேர்ந்தவர் லட்சுமி(65). இவர் இன்று காலை காய்கறி வாங்க மார்கெட்டுக்கு சென்றார். காளியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டிப்-டாப் உடையணிந்த ஆசாமி லட்சுமியிடம் உங்களுக்கு முதியோர் உதவித்தொகை, பஸ் பாஸ் பெற்றுத்தருவதாக கூறினார். மேலும் அரசு உதவித்தொகை வாங்க கழுத்தில் நகை அணியக்கூடாது. அதை எடுத்து பத்திரமாக வையுங்கள் என கூறியுள்ளார்.
இதை நம்பிய லட்சுமி நகையை கழற்றி சேலை முந்தாணையில் வைக்க முயன்றார். இந்த வேளையில் அந்த நபர் லட்சுமியிடம் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். இதனால் பதறிய லட்சுமி திருடன், திருடன் என சத்தம் போட்டார். உடனே அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதுபற்றி வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நூதனமுறையில் நகை பறித்து சென்ற மர்மநபர் யார்? இதுபற்றி கண்காணிப்பு காமிராவில் ஏதும் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X