search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பேரையூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

    பேரையூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் போத்தலிங்கம் (வயது 80), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

    இவர் சம்பவத்தன்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போத்தலிங்கம் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போத்தலிங்கத்தின் மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×