search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    சாத்தான்குளம் அருகே மனைவியை கல்லால் தாக்கிய தொழிலாளி

    சாத்தான்குளம் அருகே மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தொழிலாளி மனைவியை கல்லால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கடக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாஸ்கர்(வயது 50). இவரது மனைவி ஜானகி(45). ஜெயபாஸ்கர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்றும் மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜெயபாஸ்கர் தனது மனைவியை அடித்துள்ளார். மேலும் கல்லால் அவரது தலையில் அடித்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து ஜானகி தட்டார்மடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயபாஸ்கரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×