என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நரிக்குடி அருகே வாக்கிடாக்கி மாயமானதால் வாலிபரை தாக்கிய போலீசார்- உறவினர்கள் முற்றுகை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி எஸ்.மரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவக்கண்ணன் (வயது 21). இவர் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக சம்பவத்தன்று ஏ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார்.
அங்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில் மாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை அழைத்துள்ளனர். இதனால் தவக்கண்ணன் போலீஸ் நிலையம் சென்றார். அவரிடம் போலீஸ் நிலைய வாக்கிடாக்கி மாயமானது குறித்து கேட்டுள்ளனர்.
போலீஸ் நிலையம் சென்ற தவக்கண்ணன் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடத் தொடங்கினர். ஏ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்று கேட்டனர்.
அப்போது காலையில் தவக்கண்ணன் வந்து சென்ற பிறகு போலீஸ் நிலையத்தில் இருந்த வாக்கிடாக்கி மாயமாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதுபற்றி விசாரிக்கவே மாலையில் தவக்கண்ணனை அழைத்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் தவக் கண்ணனை உறவினர்கள் சந்தித்தபோது அவர் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாக்கி டாக்கி மாயமானது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கேட்டதோடு தாக்கியதாக தவக்கண்ணன் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தவக்கண்ணன் விடுவிக்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர்.
விசாரணைக்கு அழைத்து தவக்கண்ணனை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு துணை சூப்பிரண்டுகள் சசிதர் (திருச்சுழி), வெங்கடேசன் (அருப்புக்கோட்டை) விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமரசம் செய்தனர். இதற்கிடையில் தவக்கண்ணன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்