search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 70 பேர் தொடர்ந்து கண்காணிப்பு

    திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த 48 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 70 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் மூலம் மக்கள் கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 48 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 70 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×