என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை
Byமாலை மலர்23 March 2020 4:46 AM GMT (Updated: 23 March 2020 4:46 AM GMT)
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை:
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைகளில் உள்ள விசாரணை கைதிகள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிறிய குற்றங்களில் தொடர்புடைய 54 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை சிறை நிர்வாகத்துக்குட்பட்ட சிறைகளில் இருந்து மேலும் 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை கிளை சிறையில் ஒருவர், சிவகங்கை கிளைச் சிறையில் 4 பேர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் 5 பேர், திருப்பத்தூர் கிளைச் சிறையில் ஒருவர், பெரியகுளம் கிளைச் சிறையில் 3 பேர், தேனி சிறையில் 21 பேர் மற்றும் பாளையங்கோட்டைக்குட்பட்ட நாகர்கோவில் கிளைச் சிறையில் இருந்து 31 கைதிகள் என 66 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைகளில் உள்ள விசாரணை கைதிகள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிறிய குற்றங்களில் தொடர்புடைய 54 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் மதுரை சிறை நிர்வாகத்துக்குட்பட்ட சிறைகளில் இருந்து மேலும் 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை கிளை சிறையில் ஒருவர், சிவகங்கை கிளைச் சிறையில் 4 பேர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் 5 பேர், திருப்பத்தூர் கிளைச் சிறையில் ஒருவர், பெரியகுளம் கிளைச் சிறையில் 3 பேர், தேனி சிறையில் 21 பேர் மற்றும் பாளையங்கோட்டைக்குட்பட்ட நாகர்கோவில் கிளைச் சிறையில் இருந்து 31 கைதிகள் என 66 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X