search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற பெண் கைது

    திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வத்தலதொப்பம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் மனைவி முருகேஸ்வரி (வயது 47) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாணார்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சாணார்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் விதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×