என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33).
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 2 பவுன் நெக்லஸ், ½ பவுன் கம்மல், வெள்ளிக்கொலுசு, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயின. இதன் மதிப்பு ரூ.42,500 ஆகும்.
இதுபற்றி தென்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் வடக்கு பூந்தோட்டத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50).சம்பவத்தன்று இவர் மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்று விட்டார். மறு நாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி. ஹோம் தியேட்டர், டி.வி.டி பிளேயர் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவைகொள்ளை போயிருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும்.
இதுபற்றி ராஜேந்திரன் பெரியகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்