என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் விபத்தில் பெண் ஐ.டி. ஊழியர் பலி
Byமாலை மலர்21 March 2020 10:04 AM GMT (Updated: 21 March 2020 10:04 AM GMT)
கோவையில் இன்று காலை விபத்தில் பெண் ஐ.டி. ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சாய்பாபா காலனி என்.பி.சி. ஆபீஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பூர்ணிமா கனி(வயது22).
இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் இன்று காலை 11 மணியளவில் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கணபதிக்கு மொபட்டில் சென்றார்.
சரவணம்பட்டி செக்போஸ்ட் அருகே வந்தபோது பூர்ணிமா கனி நிலைதடுமாறி சாலையின் வலது புறத்தில் கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் பூர்ணிமா கனி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி என்.பி.சி. ஆபீஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பூர்ணிமா கனி(வயது22).
இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் இன்று காலை 11 மணியளவில் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கணபதிக்கு மொபட்டில் சென்றார்.
சரவணம்பட்டி செக்போஸ்ட் அருகே வந்தபோது பூர்ணிமா கனி நிலைதடுமாறி சாலையின் வலது புறத்தில் கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் பூர்ணிமா கனி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X