என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் போலி கிருமிநாசினி தயாரித்த 2 பேர் கைது
தூத்துக்குடி:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதனை பயன்படுத்தி தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எந்தவித உரிமமும் பெறாமல் கிருமி நாசினி தயாரிக்கப்படுவதாக தூத்துக்குடி வருவாய்த் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலி கிருமி நாசினி தயாரித்து வைத்திருந்ததும், அதை தயாரிக்க தேவையாக பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ .2 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் தூத்துக்குடி அருகே உள்ள கீழமுடிமன் பகுதியை சேர்ந்த ஜான் கிஷோன், ஜான் பெனடிக் ஆகிய 2 பேரை பிடித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்