என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரவாயலில் பாலியல் தொல்லை கொடுத்து சிறுமி கொலை- கட்டிட தொழிலாளி கைது
Byமாலை மலர்21 March 2020 6:57 AM GMT (Updated: 21 March 2020 6:57 AM GMT)
மதுரவாயலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
மதுரவாயல் எம்.எம்.டி. காலனி 4-வது பிளாக் 9-வது தெருவைச் சேர்ந்த வடமாநில தம்பதிகளின் 10 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11.30மணிக்கு வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.
மேலும் அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வீட்டின் பின்புறம் ரத்த காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
சிறுமியின் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (29) என்பவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த சுரேஷ் கழிவறைக்கு சென்று திரும்பிய சிறுமியை மொட்டமாடிக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார்.
அப்போது சிறுமி அழுது கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் சிறுமியை தாக்கி மாடியிலிருந்து கீழே தள்ளியது தெரியவந்தது. சுரேஷை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் எம்.எம்.டி. காலனி 4-வது பிளாக் 9-வது தெருவைச் சேர்ந்த வடமாநில தம்பதிகளின் 10 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11.30மணிக்கு வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.
மேலும் அக்கம்பக்கம் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வீட்டின் பின்புறம் ரத்த காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-
சிறுமியின் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (29) என்பவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருந்த சுரேஷ் கழிவறைக்கு சென்று திரும்பிய சிறுமியை மொட்டமாடிக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார்.
அப்போது சிறுமி அழுது கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் சிறுமியை தாக்கி மாடியிலிருந்து கீழே தள்ளியது தெரியவந்தது. சுரேஷை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X