search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X
    வாலிபர் தற்கொலை

    2 மனைவிகளும் வெறுத்ததால் வாலிபர் தற்கொலை

    மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 2 மனைவிகளும் வெறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை அவனியாபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முத்து இருளாண்டி (வயது 35). இவரது மனைவி முத்து ராமு. இவருக்கு தெரியாமல் மீனா என்ற பெண்ணை முத்து இருளாண்டி 2-வது திருமணம் செய்துள்ளார்.

    இந்த தகவல் முத்துராமு, மீனாவுக்கு தெரிய வரவே இருவரும் முத்து இருளாண்டியிடம் சண்டை போட்டனர். உன்னுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டனர்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்து இருளாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை கரிமேடு யோகானந்தா சாமி மடம் தெருவைச் சேர்ந்தவர் சேரன் (40). தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சேரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×