search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மதுக்கூர் அருகே மயானத்தில் தொழிலாளி அடித்து கொலை- 4 பேர் வெறிச்செயல்

    மதுக்கூர் அருகே குடிபோதையில் தொழிலாளியை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள பழவேரிகாடு, புது காலணி தெருவை சேர்ந்தவர் இளமாறன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று இரவு பழவேரிக்காடு துருசாலைகுளம் மயானத்தில் வைத்து இறந்த ஒருவரின் பிரேதத்தை தகனம் செய்வதற்காக சுடுகாட்டில் தங்கினார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த லெட்சுமணன், ஆதியப்பன், மூர்த்தி, ரெத்தினபாரதி ஆகியோரும் இருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மது அருந்தினர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி லெட்சுமணன், ஆதியப்பன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சரமாரியாக இளமாறனை கட்டையால் அடித்து தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் இளமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து லெட்சுமணன் உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இளமாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லெட்சுமணன், ஆதியப்பன், மூர்த்தி, ரெத்தின பாரதி ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×