search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    அமைந்தகரையில் தம்பியுடன் சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல்

    அமைந்தகரையில் மொபட்டில் தம்பியுடன் சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    அண்ணாநகர்:

    அமைந்தகரை, பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் நேற்று இரவு தனது தம்பியுடன் பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு மொபட்டில் சென்றார்.

    அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார். திடீரென அவன் மாணவியின் தம்பியை தாக்கி அங்கிருந்து விரட்டினான்.

    பின்னர் மாணவியை அதே மொபட்டில் கடத்தி சென்று விட்டான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தம்பி, நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறினான்.

    இதுபற்றி அவர்கள் அமைந்தகரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×