என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைந்தகரையில் தம்பியுடன் சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தல்
Byமாலை மலர்20 March 2020 10:11 AM GMT (Updated: 20 March 2020 10:11 AM GMT)
அமைந்தகரையில் மொபட்டில் தம்பியுடன் சென்ற பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாநகர்:
அமைந்தகரை, பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் நேற்று இரவு தனது தம்பியுடன் பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு மொபட்டில் சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார். திடீரென அவன் மாணவியின் தம்பியை தாக்கி அங்கிருந்து விரட்டினான்.
பின்னர் மாணவியை அதே மொபட்டில் கடத்தி சென்று விட்டான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தம்பி, நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறினான்.
இதுபற்றி அவர்கள் அமைந்தகரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X