என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது
Byமாலை மலர்20 March 2020 9:48 AM GMT (Updated: 20 March 2020 9:48 AM GMT)
கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மாற்றுமுறை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர். கிட்டத்தட்ட அவரது பதிவுகள் அனைத்தும் மருத்துவத் துறையை நம்பக்கூடாது என்ற அடிப்படையில்தான் இருக்கும். இதனால் பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களை கொல்லும் நடவடிக்கை என்றும், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் பலர் கூறினர்.
இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட கலெக்டருக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X