என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் முக கவசம் தட்டுப்பாடு
Byமாலை மலர்20 March 2020 3:13 AM GMT (Updated: 20 March 2020 3:13 AM GMT)
திருச்சியில் ஒரு முக கவசம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தொழிலாளி தெரிவித்துள்ளார்.
திருச்சி:
வைரஸ் வராமல் தடுக்க வெளியில் செல்லும்போது முகத்தில் முக கவசம் (மாஸ்க்) அணிந்து கொள்ளவேண்டும், ஒருவருக்கொருவர் கை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வின் காரணமாக அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப முக கவசங்கள் மருந்து கடைகளில் கிடைப்பது இல்லை. திருச்சியில் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்திமார்க்கெட் காந்தி சிலை அருகில் நேற்று காலை போஸ் இளைஞர் எழுச்சி கழகம் சார்பில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவசமாக முக கவசங்கள் மற்றும் கைகழுவுவதற்கான சோப்புகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில் ‘ஒரு முக கவசம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு இவற்றை இலவசமாக வழங்க வேண்டும்’ என்றார்.
வைரஸ் வராமல் தடுக்க வெளியில் செல்லும்போது முகத்தில் முக கவசம் (மாஸ்க்) அணிந்து கொள்ளவேண்டும், ஒருவருக்கொருவர் கை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வின் காரணமாக அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப முக கவசங்கள் மருந்து கடைகளில் கிடைப்பது இல்லை. திருச்சியில் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்திமார்க்கெட் காந்தி சிலை அருகில் நேற்று காலை போஸ் இளைஞர் எழுச்சி கழகம் சார்பில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவசமாக முக கவசங்கள் மற்றும் கைகழுவுவதற்கான சோப்புகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில் ‘ஒரு முக கவசம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு இவற்றை இலவசமாக வழங்க வேண்டும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X