என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வி.டி.பட்டி வடக்காம் பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது60). இவர் மேட்டுப்பட்டியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவரது மகன் யுவராஜ் எலக்ட்ரிசனாக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர். பெரியசாமியின் மனைவி அமிர்தவள்ளி, மருமகள் சுப்புலட்சுமி ஆகியோர் 100 நாள் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் தங்கநகையை கொள்ளையடித்து சென்றனர். வேலை முடிந்து வீடு திரும்பிய பெரியசாமி பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளைபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ரூரல் டி.எஸ்.பி வினோத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சீனியம்மாள் சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தார். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. மேலும் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்