என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை- 3 பேர் கைது
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள அம்மன்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது47) விவசாயி. இவரது அண்ணன் மகன் முத்துமாணிக்கம் (37) இரண்டு குடும்பமும் ஒரே தெருவில் வசித்து வருகின்றனர்.
முத்துமாணிக்கத்தின் மனைவி கலைச்செல்வி (32). கலைச்செல்விக்கும் அதே தெருவைச் சேர்ந்த தினேஷ் (33) என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிவழகன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்துமாணிக்கம் நேற்று மாலை அறிவழகனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் வீட்டிற்குள் இருந்த அரிவாளை கலைச்செல்வி எடுத்து தனது கணவன் முத்து மாணிக்கத்திடம் தர தினேஷ் அறிவழகனை மறித்துக் கொள்ள முத்துமாணிக்கம் அரிவாளால் அறிவழகனை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் இறந்துள்ளார்.
இது குறித்துதகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அறிவழகனின் மகன் பிரகாஷ்(20) திருக்காட்டுப் பள்ளி போலீசில் புகார் செய்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிவாளால் வெட்டிய முத்து மாணிக்கம் அவரது மனைவி கலைச்செல்வி, தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்