என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் மாயம்
Byமாலை மலர்18 March 2020 12:58 PM GMT (Updated: 18 March 2020 12:58 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கோதிகுட்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கலைவாணி (24). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. கலைவாணி தனது அம்மா வீடான கிருஷ்ணகிரி அடுத்த பாலிகானூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ம்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற கலைவாணி வீடுதிரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா வெள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜ்பிரசாத்(26) என்பவர் அழைத்து சென்றுள்ளார். எனவே, அவரிடம் இருந்து தனது மகள் கலைவாணியை மீட்டுதர வேண்டும் என கலைவாணியின் அம்மா ரோஜா கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் நேற்று புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கணேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X