என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நரிக்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல்
காரியாபட்டி:
நரிக்குடி பகுதியில் கிருதுமால் ஆற்றுப் பகுதியில் சில மாதங்களாக அனுமதியின்றி மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும் மணல் மாபியாக்கள் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தி வைத்து அரசு அதிகாரிகள் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். இதனால் மணல் லாரிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் நரிக்குடி சார்பு ஆய்வாளர் கமல் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விளாங்குடி ஓடை பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போது 2 டிராக்டரில் மணல் அள்ளுவது கண்டறியப்பட்டது.
போலீசாரை கண்ட டிராக்டர் உரிமையாளர்கள் வாகனத்தை போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து நரிக்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது சம்பந்தமாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்