search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

    குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குளித்தலை:

    குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றியக் குழு தலைவர் விஜய விநாயகம் தலைமையில் நடைபெற்றது.

    கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒன்றியக்குழு கூட்ட அரங்கில்  ஒன்றியக்குழு பெருந்தலைவர் விஜயவிநாயகம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேல், மங்கையர்க்கரசி ஆகியோர் முன்னிலையிலும் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் கொரானா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார். 

    இதில் அனைத்து மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு மைய அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பாதுகாப்பு குறித்தும், கை கழுவும் முறைகள் மற்றும் அதற்கான சோப்புகளும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×