search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    தூத்துக்குடியில் திடீர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

    தூத்துக்குடியில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்தனர்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி 58-வது வார்டு காந்திநகர் சுற்றுவட்டாரம் முழுவதும் நேற்று இரவு 7 மணிக்கு மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் சுமார் ஆயிரம் வீடுகள் மற்றும் தெருவீதிகள் இருளில் மூழ்கியது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய- மாநில அரசுகளின் அறிவிப்புகளை பொதுமக்கள் தொலைகாட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தனர். 

    இதையடுத்து முத்தையாபுரம் தெற்கு பகுதி மின்வாரியத்திற்கு அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் தகவல் தொவித்தனர். எனினும் நீண்ட நேரமாக அப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இருளில் இருந்தது. இந்த திடீர் மின்தடையால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்தனர்.

    Next Story
    ×