search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கொரோனா வைரஸ்: ஐகோர்ட்டில் தடுப்பு நடவடிக்கை

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 20 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    சென்னை:

    கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி மற்றும் 6 மூத்த நீதிபதிகள் நேற்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீதிமன்ற வளாகங்களிலும் விரிவுபடுத்த நீதிபதிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை நீதிமன்ற நேரம் தொடங்குவதற்கு முன்பாக சென்னை மாநகராட்சியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுவதும் சென்னை மாநகராட்சி சார்பில் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வ குமார், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் யமுனா ஆகியோர் மேற்பார்வையில் 20 பணியாளர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அனைவரையும் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதித்தனர்.
    Next Story
    ×