search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 6 வாலிபர்கள் கைது

    கோவில்பட்டியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 6 வாலிபர்களை கைது செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேலாயுதபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 30), 1-வது தெருவைச் சேர்ந்த செந்தில்மாரி கண்ணன் (30), சாத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்த பாலமுருகன் (26), லிங்கம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த முருகேஸ்வரன் (30), இலுப்பையூரணி வாழைத்தோட்டத்து நகரைச் சேர்ந்த தங்க மாரியப்பன் (33), கோவில்பட்டி வேலாயுதபுரம் 3-வது தெருவை சேர்ந்த சீனிவாச பெருமாள் ஆகியோர் எனவும், மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×