search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பத்தூரில் இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

    திருப்பத்தூரில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது25) இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த அவரது அக்காள் மகள் நந்தினி (19). இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது நந்தினி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×