search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தல் - 9 பேர் கைது

    பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்திய 9 பேரை கைது செய்த போலீசார் அவர்களின் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக பெரிய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்பிரபாகர் மற்றும் போலீசார் இன்று அதிகாலை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போதுஅங்கு மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்து 9 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள். 9 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×