search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவை அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

    கோவை அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் ஷியாம்குமார் (வயது 27). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனன்(23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ஷியாம்குமாரை மணிகண்டன் தொடர்பு கொண்டு காந்தி மாநகர் பகுதியில் உள்ள பன்னாரி மாரியம்மன் கோவிலுக்கு வருமாறு அழைத்தார்.

    இதையடுத்து ஷியாம் குமார் அங்கு சென்ற போது மணிகண்டன் தனது நண்பர்களான கார்த்திக், அரவிந்த், மற்றொரு சியாமுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஷியாம் குமாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷியாம்குமாரை குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டன், கார்த்திக், அரவிந்த், சியாம் ஆகிய 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் சியாம், அரவிந்த் ஆகியோர் காந்தி மாநகரில் சுற்றிதிரிவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சியாம், அரவிந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×