என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்கேஜி., யூகேஜிக்கு விடுமுறை நிறுத்தி வைப்பு - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Byமாலை மலர்14 March 2020 1:22 PM GMT (Updated: 14 March 2020 1:22 PM GMT)
மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறைதான் என விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை தான், முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ரஜினி இன்னும் கட்சியே தொடங்காத நிலையில் அவர் பேசியது பற்றி கருத்து கூறவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 16 முதல் 31-ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது இன்று திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X