என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி தொடக்கம்
Byமாலை மலர்14 March 2020 10:37 AM GMT (Updated: 14 March 2020 10:37 AM GMT)
கூடங்குளம் 2-வது அணு உலை இன்று இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணுஉலைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் முதலாவது அணு உலையில் தற்போது 980 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
2-வது அணுஉலையில் கடந்த டிசம்பர் மாதம் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது அணுஉலை இயக்கப்பட்டது. அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
தற்போது 2 அணு உலைகளும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூடங்குளம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணுஉலைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் முதலாவது அணு உலையில் தற்போது 980 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
2-வது அணுஉலையில் கடந்த டிசம்பர் மாதம் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 2-வது அணுஉலையில் பராமரிப்பு பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது அணுஉலை இயக்கப்பட்டது. அங்கு 350 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
தற்போது 2 அணு உலைகளும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூடங்குளம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X