search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    மதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

    மதுரையில் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள கோமதிபுரம் அம்பிகை நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அஞ்சனா (வயது 39). இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அஞ்சனாவிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் அஞ்சனாவை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்து அஞ்சனா, அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    அண்ணா நகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, திருட்டு போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்காததால் சமூக விரோதிகள் தைரியமாக குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள், பொதுமக்கள் வெளியில் வரவே அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×