search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மரக்காணத்தில் திருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவி பலாத்காரம்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி தனியாக இருப்பதை அறிந்தார்.

    பின்னர் நைசாக வீட்டுக்குள் புகுந்த சுரேஷ் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் உன்னை திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி பலாத்காரம் செய்தார். நேற்று மாணவிக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மாணவியின் பெற்றோர் புதுவை கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அப்போது டாக்டர்கள் மாணவியை பரிசோதித்ததில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரம் குறித்து கேட்டபோது சுரேஷ் பற்றி மாணவி கூறி உள்ளார்.

    இதுகுறித்து மாணவியின்பெற்றோர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தொழிலாளி சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
    Next Story
    ×