search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரம், செடிகளுக்கு தீ
    X
    மரம், செடிகளுக்கு தீ

    திண்டுக்கல் அருகே மரம், செடிகளுக்கு தீ வைக்கும் மர்ம கும்பல்

    திண்டுக்கல் அருகே மரம், செடிகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்து செல்வதால் பொதுமக்கள் மற்றும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு அருகில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே சாலையோரம் உள்ள மரம், செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்று விடுகின்றனர். காற்று வேகமாக வீசி வருவதால் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. தீயணைப்புத்துறையினர் வந்து அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தாழ்வான மின்சார வயர்கள் செல்கிறது. பள்ளி மற்றும் அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. எனவே தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் லதா பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×