என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அருமனை அருகே கடையை உடைத்து பொருட்கள் கொள்ளை
நாகர்கோவில்:
அருமனை மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 56). இவர் பனச்சமூடு பகுதியில் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு அவர் வியாபாரம் முடிந்த பின் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் மேல் பகுதி சீட் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள் சென்று பார்த்த போது அங்கு இருந்த கம்ப்யூட்டர், மரம் ஏறும் எந்திரம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையின் மேல் கூரை உடைக்கப்பட்ட இடம் மற்றும் பொருட்கள் இருந்த இடங்களில் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 20). இவர் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியில் உள்ள மீன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களுடன் அறையில் இருக்கும்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு இருந்த செல்போன்களை திருடினார். இதனைப்பார்த்த ராமகிருஷ் ணன் திருடன், திருடன் என அலறினார். அதற்குள் அந்த வாலிபர் செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்