என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்13 March 2020 2:12 AM GMT (Updated: 13 March 2020 2:12 AM GMT)
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம் என்று பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலம் :
சேலத்தில், மறைந்த பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேசின் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது, இந்த தருணம் சரியாக இருக்காது. 1996-ம் ஆண்டில் ரஜினிகாந்த் செய்த தவறு தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தது. அப்போது அவர் ஆதரவு கொடுத்து ஒருவரை முதல்-அமைச்சராக ஆக்க முடியும் என நிரூபித்து காட்டியவர். தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தகுந்த நேரத்தில் தலைமை நியமித்துள்ளது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சேலத்தில், மறைந்த பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேசின் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது, இந்த தருணம் சரியாக இருக்காது. 1996-ம் ஆண்டில் ரஜினிகாந்த் செய்த தவறு தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தது. அப்போது அவர் ஆதரவு கொடுத்து ஒருவரை முதல்-அமைச்சராக ஆக்க முடியும் என நிரூபித்து காட்டியவர். தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தகுந்த நேரத்தில் தலைமை நியமித்துள்ளது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X