என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - கரூர் பகுதியில் மண்பானை விற்பனை அமோகம்
Byமாலை மலர்12 March 2020 5:52 PM GMT (Updated: 12 March 2020 5:52 PM GMT)
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கரூர் பகுதியில் மண்பானை விற்பனை அமோகமாக நடக்கிறது.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏப்ரல்,மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரூர் பகுதியில் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பொருட்களை அதிக அளவில் மக்கள் வாங்கி உண்பதை காணமுடிகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் மண் சட்டியில் சமையல் செய்து சாப்பிட்டு, மண்பானையில் நீர் ஊற்றி வைத்து அதை குடித்து வந்தனர். தற்போது வேலை பளுவின் காரணமாக கிராமங்களில் கூட அதிக அளவில் பிரிட்ஜ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மண்பாண்டத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் வெயிலின் தாகத்தை தீர்க்க மண்பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் தாகம் தணியும் என்பதால், கரூர் பகுதியில் சாலையோரங்களில் தற்போது மண்பானையின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுகுறித்து கரூர் பகுதியை சேர்ந்த மண்பானை வியாபாரி கூறுகையில், பைப் வைத்து விற்பனை செய்யப்படும் மண் பானைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் அளவிற்கு ஏற்ப ரூ.270, ரூ.300, ரூ.400, ரூ.450 என்ற வகைகளில் விற்கப்படுகிறது. இதை பொது மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்றார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏப்ரல்,மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரூர் பகுதியில் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பொருட்களை அதிக அளவில் மக்கள் வாங்கி உண்பதை காணமுடிகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் மண் சட்டியில் சமையல் செய்து சாப்பிட்டு, மண்பானையில் நீர் ஊற்றி வைத்து அதை குடித்து வந்தனர். தற்போது வேலை பளுவின் காரணமாக கிராமங்களில் கூட அதிக அளவில் பிரிட்ஜ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மண்பாண்டத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் வெயிலின் தாகத்தை தீர்க்க மண்பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் தாகம் தணியும் என்பதால், கரூர் பகுதியில் சாலையோரங்களில் தற்போது மண்பானையின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதுகுறித்து கரூர் பகுதியை சேர்ந்த மண்பானை வியாபாரி கூறுகையில், பைப் வைத்து விற்பனை செய்யப்படும் மண் பானைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் அளவிற்கு ஏற்ப ரூ.270, ரூ.300, ரூ.400, ரூ.450 என்ற வகைகளில் விற்கப்படுகிறது. இதை பொது மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X