என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி - வாலிபர் கைது
Byமாலை மலர்12 March 2020 2:29 PM GMT (Updated: 12 March 2020 2:29 PM GMT)
ராஜபாளையம் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 38). இவர் தன்னை பல இடங்களில் போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
அந்தப்பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் ஆனந்த் என்பவரின் மனைவியிடம் ரூ.2 லட்சமும், குறிச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமி, சுரேஷ்குமார், செல்வராஜ் உட்பட 12 பேரிடம் ரூ.20 லட்சம் வரை பெற்றுள்ளார்.
வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
எனவே பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து வசந்த்திடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மோசடி பணத்தில் 3 கார்கள், நிலம், தோப்பு, வீடு போன்ற சொத்துக்கள் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 38). இவர் தன்னை பல இடங்களில் போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
அந்தப்பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் ஆனந்த் என்பவரின் மனைவியிடம் ரூ.2 லட்சமும், குறிச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமி, சுரேஷ்குமார், செல்வராஜ் உட்பட 12 பேரிடம் ரூ.20 லட்சம் வரை பெற்றுள்ளார்.
வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
எனவே பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து வசந்த்திடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மோசடி பணத்தில் 3 கார்கள், நிலம், தோப்பு, வீடு போன்ற சொத்துக்கள் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X