search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைவாய்ப்பு முகாம்
    X
    வேலைவாய்ப்பு முகாம்

    விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 13-ந்தேதி நடக்கிறது

    விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.
    விருதுநகர்:

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலை நாடும் இளைஞர்கள் பயன்பெறுவதற்காக வெள்ளிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்கின்றன.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள்களுடன் வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்காது என விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×