search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திருமங்கலம் பகுதியில் ராணுவ வீரர், இளம்பெண்கள் மாயம்

    வெவ்வேறு சம்பவங்களில் ராணுவ வீரர் மற்றும் இளம்பெண்கள் மாயமானார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், வில்லூர் அருகே உள்ள தென்மைநல்லூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). ராணுவ வீரரான இவர் டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு அழகு என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஊருக்கு வந்த அய்யனார் ஆகஸ்டு மாதம் பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அய்யனார் வேலைக்கு செல்லாமல் மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராணுவ வீரரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் செங்குளத்தில் உள்ள கே.கே. நகரை சேர்ந்தவர் ஜோசப் கென்னடி. இவரது மகள் ஜெர்லின் ஸ்வேதா (21). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் நடுத் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஆர்த்தி (23). வலையங்குளத்தில் உள்ள ஆடை உற்பத்தியகத்தில் வேலை பார்த்து வந்த ஆர்த்தி சம்பவத்தன்று மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஆஸ்டின் பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×