search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரியில் மது விற்ற 3 பேர் கைது

    தர்மபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக மது விற்ற 3 பேரை கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மதுவிற்பவர்களை கைதுசெய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    அப்போது கோட்டப்பட்டி போலீசார் நரிப்பள்ளி பகுதியை சேர்ந்த வேலாயுதம் மற்றும் சந்திரன் என்பவர்களை அரசுக்கு புறம்பாக மதுவிற்றதன் பேரில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

    இதேபோன்று பெரும்பாலை போலீசார் நடத்திய சோதனையில் மேச்சேரி ரோடு அடுத்துள்ள காவக்காடு பஸ் நிறுத்தம் அருகே சிவலிங்கம் என்பவர் அரசுக்கு புறம்பாக மது விற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் இவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×