என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் 14-ந் தேதி நடக்கிறது
ராமநாதபுரம்:
தமிழக முதல்- அமைச்சர் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் சுழற்சி முறையில் ஒரு கிராமத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மார்ச் - 2020 மாதத்தில் கீழ்காணும் கிராமங்களில் நடத்தப்பட உள்ளன.
ராமநாதபுரம் வட்டம் - ஆற்றாங்கரை, ராமேசுவரம் வட்டம் - ராமேசுவரம், திருவாடானை வட்டம் -துத்தாகுடி, பரமக்குடி வட்டம்-கொளுவூர், முதுகுளத்தூர் வட்டம் - காக்கூர், கடலாடி வட்டம் - மேலக்கிடாரம், கமுதி வட்டம் - பம்மனேந்தல், கீழக்கரை வட்டம் - பள்ள மோர்குளம், ஆர்.எஸ். மங்கலம் வட்டம் - சித்தூர் வாடி ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் சம்பந்தமான தங்களின் குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற குறைகளுக்கு தீர்வு காண, 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்