search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி தற்கொலை
    X
    விவசாயி தற்கொலை

    நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

    நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது52). விவசாயி. இவர் சொந்தமாக வீடு கட்டி வந்தார். இதற்காக பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். இந்த நெருக்கடி காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×