என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மண்ணச்சநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்
Byமாலை மலர்9 March 2020 1:43 PM GMT (Updated: 9 March 2020 1:43 PM GMT)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மண்ணச்சநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் ஜமாத் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அபுபக்கர், மண்ணச்சநல்லூர் காந்திநகர் முகம்மதியா பள்ளிவாசல் துணைத்தலைவர் முகம்மது இப்ராஹிம் ஆகியோர் தலைமை வகித்தனர். பேராசிரியர் அருணன், த.மு.மு.க. தலைமை கழக பேச்சாளர் பாரூக், மாநில பொருளாளர் சபி யுல்லாகான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் சபிபுல்லா, மனிதநேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல்மாலிக், முகம்மது யூசுப், ஜவஹர், மவுலானா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X