என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அதிமுக சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்- பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்
உடுமலை:
திருப்பூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பதஞ்சலி பவுண்டேசன் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள், திருநங்கைகள், முதியோர்கள் உள்பட 500 பேருக்கு சேலை மற்றும் போர்வைகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்த தினம், சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு திருமூர்த்தி மலை பதஞ்சலி ஆசிரமத்தில் உள்ள மலைவாழ் மக்கள், திருநங்கைகள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளோம்.
தமிழக முதல்- அமைச்சர் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டி வருகிறார். தொடர்ந்து விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்களும் ஒரு விவசாயி என்ற முறையில் பெருமை கொள்கிறோம் என்றார். விழாவில் முன்னாள் நகராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணாயிரம், ஒன்றிய செயலாளர்கள் ஜெகநாதன், ஆறுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்