என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேரன்மகாதேவி அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி
நெல்லை:
சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் பட்டன்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32), மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு பிரேமா (30) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று மாலை கங்கனாங்குளத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற ரமேஷ் அங்குள்ள மணிமுத்தன் கால்வாயில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மேலும் அவர் தண்ணீரில் மூழ்கினார். அப்போது அவர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து ரமேசை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் ரமேஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.
உடனே இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ரமேசின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்