search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    தூத்துக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

    தூத்துக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே வாகைக்குளம் இந்திராநகர் அருணாசலம் மகன் சிவா (வயது35). இவரது மனைவி கஸ்தூரி (31) நேற்று அதிகாலை வீட்டின் ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது பின்பக்க மரக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கஸ்தூரி கழுத்தில் கிடந்த 6½ பவுன் மற்றும் 3½ பவுன் எடையுள்ள தங்க செயின்களை பறித்துள்ளார். இதையடுத்து அவர் கண்விழித்து சுதாரிப்பதற்குள் அந்தநபர் தப்பியுள்ளார்.

    இச்சம்பவத்தில் கஸ்தூரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×