என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாசுதேவநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்8 March 2020 5:22 PM GMT (Updated: 8 March 2020 5:22 PM GMT)
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரத்தை அடுத்த சரவணாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 53). வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அருளாச்சி கிராமத்தில் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.
மதியம் 12 மணி அளவில் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பெயிண்ட் அடித்தபோது, அங்கு அவரது தலைக்கு மேல் காணப்பட்ட மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மணிக்கு அமுதா (45) என்ற மனைவியும், விக்னேஷ், பிரபாகரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X