என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூம்பாறை கிராமத்தில், மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
Byமாலை மலர்7 March 2020 4:36 PM GMT (Updated: 7 March 2020 4:36 PM GMT)
கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் மதுக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மதுபோதையில் வரும் நபர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது. எனவே அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பூம்பாறை கிராமத்தை சேர்ந்த பெண்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று பெண்கள் திரண்டு வந்து மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மதுக்கடைக்கு கூடுதல் பூட்டு போட்டனர்.
இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், பூம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உயர்அதிகாரிகளிடம் பேசி மதுக்கடையை மூட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பூம்பாறை கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் பெண்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மதுபோதையில் வரும் நபர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருந்தது. எனவே அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பூம்பாறை கிராமத்தை சேர்ந்த பெண்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று பெண்கள் திரண்டு வந்து மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மதுக்கடைக்கு கூடுதல் பூட்டு போட்டனர்.
இதுகுறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், பூம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உயர்அதிகாரிகளிடம் பேசி மதுக்கடையை மூட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பூம்பாறை கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X