search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்

    மஸ்கட் நகரில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    ஓமனில் இருந்து சென்னை திரும்பிய தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஓமனில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து சென்னை வந்தவருக்கு நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதுடைய நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×