என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேத்தி உடல் நிலை பாதிப்பு: உருக்கமாக கடிதம் எழுதி வைத்து பாட்டி தற்கொலை
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை கும்பம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி (வயது 57). இவரது பேத்திக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தபோதும் நோய் குணமாகவில்லை.
இதனால் மனம் வெறுத்த லட்சுமி தனது வீட்டு அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். லட்சுமி தான் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதத்தை அவர்கள் கைப்பற்றினர். அதில் தனது பேத்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனது பேத்திக்கு முன்பாக நான் இறந்து விட வேண்டும் என முடிவு எடுத்து தற்கொலை செய்ய வேண்டும் என நினைத்தேன் என எழுதியிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்